Sunday, June 21, 2009

ஆழ்துளைக் கிணறுகள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயதுச் சிறுமி அஞ்சனா மீட்புப் படையினரால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறாள்; அவளது பெற்றோர் கடவுளுக்கும், மீட்புப் படையினருக்கும் தங்கள் நன்றியை தெரிவிக்கட்டும்; நாமும் அந்தச் சிறுமி உயிரோடு மீட்கப்பட்டதற்காக நிம்மதி கொள்வோம். இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் அடிக்கடி நிகழ்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன். சிலவற்றில் கிணற்றில் விழுந்த குழந்தைகள் உயீரோடு மீட்கப்பட்டிருக்கின்றனர்; சிலவற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஆக்ராவில் சோனா என்ற 2 வயதுச் சிறுமி இதே போல் மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பிணமாக மீட்கப்பட்டாள். சென்னையில் கூட இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தோண்டிய ஆழ்துளைக் கிணற்றை உறுதியான மரப்பலகைகள் , இரும்புத்தகடுகள் போன்றவற்றால் மூடி வைத்தால் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாது; கிணற்றை சுற்றி தற்காலிக பாதுகாப்பு வேலி கூட அமைக்கலாம். ஆனால் இந்த சிறு காரியத்தை கூட கிணற்றின் உரிமையாளர்கள் மேற்கொள்வதில்லை; அலட்சிய மனப்பான்மையே இதற்கு காரணம். இதுபோன்ற சம்பவங்களுக்கு கிணற்றின் உரிமையாளர்கள் கொலைக் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட்டாலே இனி இதுபோல் நிகழாமல் பாதுகாக்கலாம்.

No comments:

Post a Comment