Monday, May 18, 2009

நன்றிக்கடன்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்,காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.மகத்தான வெற்று பெற்றிருக்கிறது. ஆனால், இந்த பெருவெற்றிக்கு காங்கிரஸ் தகுதியானதுதானா..? கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் சாதித்தது என்ன..? கடுமையான விலைவாசி உயர்வு; தொழிற்சாலைகள் மூடல்; இலட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையிழப்பு; வறுமையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை; கோடி கோடியாய் ஊழல்கள்; ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் சுமார் 1 இலட்சம் கோடியளவுக்கு மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது; போபர்ஸ் ஊழலில் சோனியாவுக்கு நெருங்கியவரான குவத்ரோச்சியை கைதாகி விடாமல் பாதுகாக்கவும், அவர் ஊழலில் பெற்ற் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷன் தொகையை பத்திரமாக எடுத்துச் செல்லவும் உதவியது; மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யை சுயமாக செயல்பட விடாமல் செய்து, அதை காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்சி போல் மாற்றியது; நாடு முழுக்க பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; மத்திய அரசு பயங்கரவாதத்திற்கெதிராக மிக மிக மென்மையான போக்கை கடைப்பிடித்தது; பயங்கரவாதத்தால், ஆயிரக்கண்க்கில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்படுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத காங்கிரஸ் அரசு, முகமது அப்சல், அக்மல் கசாப் போன்ற தேச விரோத பயங்கரவாதிகளின் உயிர்களை பாதுகாப்பதில் மட்டும் மிகவும் அதீத கவனம் செலுத்தி வருகிறது; பங்களதேஷிலிருந்து நாட்டிற்குள் ஊடுருவிய கோடிக்கணக்கானவர்களின் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது காங்கிரஸ் அரசு; நாட்டில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் இப்படி சட்டவிரோதமக குடியேறியவர்களின் கை இருப்பது புலனாய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தனது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்த பெருமை காங்கிரஸ் அரசுக்குரியது; இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த தவறான அணுகுமுறையின் விளைவாக ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; மத்திய காங்கிரஸ் அரசு சோனிய குடும்ப அரசாக செயல்பட்டு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி உட்பட பல்வேறு உதவிகளை புரிந்ததன் விளைவாக இலங்கை அரசு தமிழினப் படுகொலயையே நிறைவேற்றி முடித்திருக்கிறது; இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக 75 இலட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டு பதுக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் பல நாடுகள் இப்படி தங்கள் நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட கருப்பு பண்த்தை மீட்க பெருமுயற்சி எடுத்து வருகின்ற வேளையில் காங்கிரஸ் அரசு அதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததோடு அது சாத்தியமற்றது என்று கூறி பெரும் கருப்புப் பண முதலைகளை காப்பாற்ற முயற்சிக்கிறது. இப்படி பலவற்றை வரிசையாக கூறிக் கொண்டே தொடரலாம். இவைகள் இந்த அளவு பெரு வெற்றிக்கு ஐ.மு.கூ சிறிதும் தகுதியற்றது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், மக்கள் தீர்ப்பு அது தவறாயிருந்தாலும் கூட மதிக்கப்பட வேண்டியது அவசியம்; எனவே இனிவரும் காலங்களிலாவது தேச நலன் மக்கள் நலன் என்பதை மட்டும் அடிப்படையாய் கொண்டு செயல்பட்டு இந்தியாவை உலக அரங்கில் முதலிடத்திற்கு கொண்டு செல்வதை இலக்காக கொண்டு பணியாற்றுவதே வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் செய்யும் நன்றிக்கடனாயிருக்கும்

No comments:

Post a Comment