Sunday, May 10, 2009
அச்சம் தரும் நினைவுகள்
இந்தியப் பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் என்பவனுக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு கடந்த 5 வருடங்களாக தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல், அவனை பாதுகாத்து வருகிறது. சிறுபான்மையினர்களின் ஓட்டுக்காக அப்சலை தூக்கிலிடாமல் காலம் தள்ளி வருகிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதிகளை கூட தண்டிக்க ம்றுக்கும், அதிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பயங்கரவாதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றாமலிருக்கிற காங்கிரஸ் அரசின் இது போன்ற செயல்பாடுகள்தான் நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்க முக்கிய காரணமாயிருக்கின்றது. இந்த விஷயத்தில் ராகுல் காந்தி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் வரிசைப்படி பார்த்தால் அப்சல் 22 வது இடத்தில் இருக்கிறான். அப்சலுக்கு முன் இருக்கிற 21 பேரும் தூக்கிலிடப்பட்ட பின் அப்சல் தூக்கிலிடப்படுவான் என்று கூறியிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், உணர்ச்சி வசப்பட்டும் கொலை போன்ற காரியங்களில் ஈடுபட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களை அப்சலோடு ஒப்பிடுகிறார் ராகுல். இது ஒரு பொறுப்பற்ற பேச்சு மட்டுமல்லாது நியாயமற்றதும் கூட. நமது நாட்டை சீர்குலைக்க திட்டமிட்டு, பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தவன் அப்சல்; நமது பாதுகாப்பு படை வீரர்கள் மட்டும் தங்கள் இன்னுயிரை ஈந்து அந்த தாக்குதலை முறியடித்திருக்காவிட்டால் நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் உட்பட பலர் உயிரிழந்திருப்பதோடு நாடே பயங்கரவாதிகளின் கைகளில் பணயக் கைதியாக மாற நேர்ந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு கொடூர பயங்கரவாதியை சாதாரண கொலைக்குற்றவாளியோடு ஒப்பிடுகிறார் ராகுல் என்றால் இது எத்தகைய மடத்தனமானது..? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நமது நாட்டுக்கு கிடைத்த சாபம். இப்படிப்பட்டவர்களால்தான் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து அப்பாவிகள் ஆயிரமாயிரமாய் தங்கள் இன்னுயிர்களை இழக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்டவர்களை மக்கள் ஒட்டுமொத்தமாய் நிராகரிக்க வேண்டும். சமீபத்தில் மும்பை மீது தாக்குதல் தொடுத்து நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிரோடு பிடிபட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறான். அவனுக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பது உறுதி. ராகுல் கூற்றுப்படி பார்த்தால் தூக்கு தண்டனை குற்றவாளிகள் பட்டியலில் கசாப் 23 வது இடத்திலிருப்பார்; எனவே கசாப்புக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என்பதுதானே ராகுல் தரும் செய்தி. எனவே ஒன்று மட்டும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்து விட்டால், எந்த பயங்கரவாதிக்கும் அவன் முஸ்லிமாக இருந்து விட்டால் தண்டனை கிடையாது என்பது உறுதியாகி விட்டது.இன்னொன்றும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்தால், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகர்க்கவே செய்யும்; காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஆயிரமாயிரமாய் மக்கள் பயங்கரவாதத்திற்கு தங்கள் இன்னுயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதிகளால் ஆயிரமாயிரமாய் மக்கள் கொல்லப்படலாம்; ஆனால் ஒரு பயங்கரவாதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் காங்கிரசின் கொள்கை . ராகுலின் பேச்சு இதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. அரசியலில் இப்போதுதான் காலெடுத்து வைத்திருக்கின்ற் நிலயில், ராகுலின் எண்ணங்கள் இப்படிப்பட்ட நிலையில் இருப்பதை பார்க்கும்போது இவரெல்லாம் பிரதமராகி விட்டால், நாடு என்ன ஆகும்..? மக்கள் என்ன கதிக்கு ஆளாவார்கள்..? நினைத்துப்பார்க்கவே அச்சமாயிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment