சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா தேர்தல் கூட்டத்தில் பேசும் போது, எனது தம்பி ராகுல் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். சோனியா காந்தி பேசும்போது, ராகுல் இப்போது பிரதமராக மாட்டார்; வருங்காலத்தில் பிரதமராவார் என்று கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தியோ எனக்கு இன்னும் போதுமான அனுபவம் கிடைக்கவில்லை; எனவே இப்போது பிரதமராக மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இந்தக் குடும்பம் ஏதோ மன்னர் குடும்பம் போலவும் இந்தியா ஏதோ அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான நாடு என்பது போலவும் இவர்களது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன. இவர்களது இத்தகைய ஆணவப் பேச்சுக்களுக்கும், ஆணவ மனப்பான்மைக்கும் இந்தியர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்கள் இந்தக் குடும்பத்திற்கு காலம் காலமாக கொத்தடிமைகளாக இருந்து கொண்டிருப்பாதால்தான் இவர்களிடமிருந்து இத்தகைய பேச்சுக்கள் வெளிப்படுகின்றன. ஆனால் ஒரு விஷயம் தெளிவானது; காங்கிரஸ்காரர்கள்தான் சோனியா குடும்பத்தின் கொத்தடிமைகளே தவிர மக்கள் அல்ல; இந்தியா மிகப்பெரும் தேசம்; ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த நாட்டை ஆளும் தகுதியுண்டு. 2001 ல் காங்கிரசிலிருந்த முதுகெலும்புள்ள ஆண்மகனான நரசிம்மராவ் பிரதமராயிருந்தபோதே இந்தக் குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு மக்கள் முடிவு கட்டிவிட்டார்கள். சுயமரியாதை அற்ற, தன்மானமிழந்த சில காங்கிரஸ்காரர்கள் இன்னும் இந்தக் குடும்பத்தின் கொத்தடிமைகளாகவே இருந்து கொண்டிருப்பதால், சோனிய குடும்பத்தினர் நாட்டின் பிரதமர் பதவி தங்கள் குடும்பச் சொத்து என்று கனவெல்லாம் கண்டு கொண்டிருக்கக் கூடாது. அது என்றுமே கனவாகத்தான் இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment