Tuesday, April 7, 2009

ஏப்ரல் 14. தமிழ்ப் புத்தாண்டு தினம்

இலங்கை இராணுவத்தின் குண்டுவீச்சில் சிக்கி இலங்கைத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலட்சக்கணக்கான அப்பாவித் த‌மிழர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு வருகிறது.அவர்கள் தங்கள் சொந்த வீடு நிலங்களை துறந்து, காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவ‌தோடு,பல்வேறு நாடுகளில் அகதிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை காப்பாற்றவும், அவர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை பெற்றுத்தர வேண்டிய இந்திய அரசு தனது கடமையிலிருந்து தவறியிருப்பதோடு, இலங்கை அரசுக்கு மறைமுக உதவிகளையும் செய்து வருகிறது. இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில், சகோதர இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவை தெரிவிக்க உறுதி கொள்வோம்..

No comments:

Post a Comment