Monday, May 18, 2009

நன்றிக்கடன்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்,காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.மகத்தான வெற்று பெற்றிருக்கிறது. ஆனால், இந்த பெருவெற்றிக்கு காங்கிரஸ் தகுதியானதுதானா..? கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் சாதித்தது என்ன..? கடுமையான விலைவாசி உயர்வு; தொழிற்சாலைகள் மூடல்; இலட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையிழப்பு; வறுமையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை; கோடி கோடியாய் ஊழல்கள்; ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் சுமார் 1 இலட்சம் கோடியளவுக்கு மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது; போபர்ஸ் ஊழலில் சோனியாவுக்கு நெருங்கியவரான குவத்ரோச்சியை கைதாகி விடாமல் பாதுகாக்கவும், அவர் ஊழலில் பெற்ற் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷன் தொகையை பத்திரமாக எடுத்துச் செல்லவும் உதவியது; மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யை சுயமாக செயல்பட விடாமல் செய்து, அதை காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்சி போல் மாற்றியது; நாடு முழுக்க பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; மத்திய அரசு பயங்கரவாதத்திற்கெதிராக மிக மிக மென்மையான போக்கை கடைப்பிடித்தது; பயங்கரவாதத்தால், ஆயிரக்கண்க்கில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்படுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத காங்கிரஸ் அரசு, முகமது அப்சல், அக்மல் கசாப் போன்ற தேச விரோத பயங்கரவாதிகளின் உயிர்களை பாதுகாப்பதில் மட்டும் மிகவும் அதீத கவனம் செலுத்தி வருகிறது; பங்களதேஷிலிருந்து நாட்டிற்குள் ஊடுருவிய கோடிக்கணக்கானவர்களின் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது காங்கிரஸ் அரசு; நாட்டில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் இப்படி சட்டவிரோதமக குடியேறியவர்களின் கை இருப்பது புலனாய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தனது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்த பெருமை காங்கிரஸ் அரசுக்குரியது; இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த தவறான அணுகுமுறையின் விளைவாக ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; மத்திய காங்கிரஸ் அரசு சோனிய குடும்ப அரசாக செயல்பட்டு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி உட்பட பல்வேறு உதவிகளை புரிந்ததன் விளைவாக இலங்கை அரசு தமிழினப் படுகொலயையே நிறைவேற்றி முடித்திருக்கிறது; இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக 75 இலட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டு பதுக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் பல நாடுகள் இப்படி தங்கள் நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட கருப்பு பண்த்தை மீட்க பெருமுயற்சி எடுத்து வருகின்ற வேளையில் காங்கிரஸ் அரசு அதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததோடு அது சாத்தியமற்றது என்று கூறி பெரும் கருப்புப் பண முதலைகளை காப்பாற்ற முயற்சிக்கிறது. இப்படி பலவற்றை வரிசையாக கூறிக் கொண்டே தொடரலாம். இவைகள் இந்த அளவு பெரு வெற்றிக்கு ஐ.மு.கூ சிறிதும் தகுதியற்றது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், மக்கள் தீர்ப்பு அது தவறாயிருந்தாலும் கூட மதிக்கப்பட வேண்டியது அவசியம்; எனவே இனிவரும் காலங்களிலாவது தேச நலன் மக்கள் நலன் என்பதை மட்டும் அடிப்படையாய் கொண்டு செயல்பட்டு இந்தியாவை உலக அரங்கில் முதலிடத்திற்கு கொண்டு செல்வதை இலக்காக கொண்டு பணியாற்றுவதே வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் செய்யும் நன்றிக்கடனாயிருக்கும்

Sunday, May 10, 2009

அச்சம் தரும் நினைவுகள்

இந்தியப் பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் என்பவனுக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு கடந்த 5 வருடங்களாக தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல், அவனை பாதுகாத்து வருகிறது. சிறுபான்மையினர்களின் ஓட்டுக்காக அப்சலை தூக்கிலிடாமல் காலம் தள்ளி வருகிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதிகளை கூட தண்டிக்க ம்றுக்கும், அதிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பயங்கரவாதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றாமலிருக்கிற காங்கிரஸ் அரசின் இது போன்ற செயல்பாடுகள்தான் நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்க முக்கிய காரணமாயிருக்கின்றது. இந்த விஷயத்தில் ராகுல் காந்தி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் வரிசைப்படி பார்த்தால் அப்சல் 22 வது இடத்தில் இருக்கிறான். அப்சலுக்கு முன் இருக்கிற 21 பேரும் தூக்கிலிடப்பட்ட பின் அப்சல் தூக்கிலிடப்படுவான் என்று கூறியிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், உணர்ச்சி வசப்பட்டும் கொலை போன்ற காரியங்களில் ஈடுபட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களை அப்சலோடு ஒப்பிடுகிறார் ராகுல். இது ஒரு பொறுப்பற்ற பேச்சு மட்டுமல்லாது நியாயமற்றதும் கூட. நமது நாட்டை சீர்குலைக்க திட்டமிட்டு, பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தவன் அப்சல்; நமது பாதுகாப்பு படை வீரர்கள் மட்டும் தங்கள் இன்னுயிரை ஈந்து அந்த தாக்குதலை முறியடித்திருக்காவிட்டால் நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் உட்பட பலர் உயிரிழந்திருப்பதோடு நாடே பயங்கரவாதிகளின் கைகளில் பணயக் கைதியாக மாற நேர்ந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு கொடூர பயங்கரவாதியை சாதாரண கொலைக்குற்றவாளியோடு ஒப்பிடுகிறார் ராகுல் என்றால் இது எத்தகைய மடத்தனமானது..? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நமது நாட்டுக்கு கிடைத்த சாபம். இப்படிப்பட்டவர்களால்தான் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து அப்பாவிகள் ஆயிரமாயிரமாய் தங்கள் இன்னுயிர்களை இழக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்டவர்களை மக்கள் ஒட்டுமொத்தமாய் நிராகரிக்க வேண்டும். சமீபத்தில் மும்பை மீது தாக்குதல் தொடுத்து நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிரோடு பிடிபட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறான். அவனுக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பது உறுதி. ராகுல் கூற்றுப்படி பார்த்தால் தூக்கு தண்டனை குற்றவாளிகள் பட்டியலில் கசாப் 23 வது இடத்திலிருப்பார்; எனவே கசாப்புக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என்பதுதானே ராகுல் தரும் செய்தி. எனவே ஒன்று மட்டும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்து விட்டால், எந்த பயங்கரவாதிக்கும் அவன் முஸ்லிமாக இருந்து விட்டால் தண்டனை கிடையாது என்பது உறுதியாகி விட்டது.இன்னொன்றும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்தால், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகர்க்கவே செய்யும்; காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஆயிரமாயிரமாய் மக்கள் பயங்கரவாதத்திற்கு தங்கள் இன்னுயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதிகளால் ஆயிரமாயிரமாய் மக்கள் கொல்ல‌ப்ப‌ட‌லாம்; ஆனால் ஒரு ப‌ய‌ங்க‌ர‌வாதி த‌ண்டிக்க‌ப்ப‌ட்டுவிடக் கூடாது என்ப‌துதான் காங்கிர‌சின் கொள்கை . ராகுலின் பேச்சு இதைத்தான் எடுத்துக்காட்டுகிற‌து. அர‌சிய‌லில் இப்போதுதான் காலெடுத்து வைத்திருக்கின்ற் நில‌யில், ராகுலின் எண்ணங்கள் இப்படிப்பட்ட நிலையில் இருப்பதை பார்க்கும்போது இவரெல்லாம் பிரதமராகி விட்டால், நாடு என்ன ஆகும்..? மக்கள் என்ன கதிக்கு ஆளாவார்கள்..? நினைத்துப்பார்க்கவே அச்சமாயிருக்கிறது.