அத்யாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மிகவும் அதிகரித்து வருகிறது. நாட்டின் உச்ச நீதிமன்றமே இப்பிரச்னையில் தலையிடுமளவுக்கு இது புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. சென்ற வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9% என்ற அளவை எட்டியிருந்த போது, இத்தகைய வளர்ச்சியோடு இணைந்து விலைவாசிகளும் உயரத்தான் செய்யும் என்று அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பொருளாதார விற்பன்னர்களும் வியாக்கியானம் அளித்திருந்தனர். இப்போது பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் இருக்கிறது; பணவீக்கமும் மைனஸில் இருக்கிறது. ஆனால் இப்போதும் விலைவாசிகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதானிருக்கின்றன.உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை பெரிதாக உயர்ந்து விடாத நிலையிலேயே மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் டீசல் மீது அபரிமிதமான விலையுயர்வை அறிவித்தது.இது ஏற்கனவே உயர்ந்து கொண்டிருந்த விலைவாசிக்கு மேலும் ஒரு தூண்டுகோலாய் அமைந்தது. மக்களின் வாங்கும் சக்தி குறைவாயிருக்கிற இக்கால கட்டத்தில் விலைவாசிகள் இப்படி இறக்கை கட்டி பறந்து கொண்டிருப்பது அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பெரிதும் பாதித்திருக்கிறது.தமிழக அரசு ரேஷன் கடைகளில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்குவதோடு விலைவாசிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்கிறது; வெளி மர்க்கெட்டில் மற்ற பொருள்களின் விலைகள் எவ்வளவு உயர்ந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கிய அரசு என்று உரக்க முழங்கி ஏதோ தமிழ் நாட்டில் விலைவாசி உயர்வு என்ற துன்பமே மக்களை பாதிக்கவில்லை என்பது போல ஒரு மாயையை உருவாக்கி வருகிறது. 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்குதல் என்பது நல்ல திட்டமே. ஆனால், இத்திட்டத்தின் மூலம் பெரும்பாலான இடங்களில் தரம் குறைந்த அரிசியே வழங்கப்படுவதால் மக்கள் இதை உணவிற்காக பயன்படுத்துவது மிகவும் குறைவாகவேயிருக்கிறது. மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 1 கிலோ அரிசி ரூ 3.50 ஆக இருந்தது; இப்போது ரூ 1 ஆகியிருக்கிறது. இதன் மூலம் மக்களுக்கு 1 மாதத்தில் மீதமாகும் தொகை 2.50*20 வெறும் 50 மட்டுமே; ஆனல், மற்ற பொருள்களின் அதிகபட்ச விலை உயர்வால் ஏற்படும் பொருளாதரப் பிரச்னையில் சிக்கி இந்த 50 ரூபாய் இலாபம் என்பது காணாமல் போய்விடுகிறது.தென்மேற்கு பருவ மழை இந்த வருடம் வழக்கத்தை விட குறைவாக பெய்திருக்கிறது; வட மாநிலங்களும் குறைவான மழைப் பொழிவையே பெற்றிருக்கின்றன; இதனால் உணவுப் பொருள்களின் உற்பத்தி குறையக் கூடும். விலைவாசிகள் மேலும் உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் விலைவாசிகளை கட்டுப்படுத்துவதில் உடனடி தீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். வெறும் அறிக்கைகளும் உறுதிமொழிகளும் எந்த பயனையும் தந்து விடப்போவதில்லை. பயன்தரத்தக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையே மக்கள் விரும்புகிறார்கள். கடந்த ஆட்சியிலும் கூட விலைவாசிகள் உயரத்தான் செய்தன என்று புள்ளி விவரங்களை அடுக்கி மக்களை ஏமாற்றாமல் பிரச்னையின் தீவிரத்தன்மையை உணர்ந்து, அதற்கு தீர்வு காணும் வழிகளை ஆராய்ந்து, விலைவாசிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
Thursday, August 20, 2009
விலைவாசி உயர்வு.
அத்யாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் மிகவும் அதிகரித்து வருகிறது. நாட்டின் உச்ச நீதிமன்றமே இப்பிரச்னையில் தலையிடுமளவுக்கு இது புதிய பரிமாணத்தை அடைந்திருக்கிறது. சென்ற வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9% என்ற அளவை எட்டியிருந்த போது, இத்தகைய வளர்ச்சியோடு இணைந்து விலைவாசிகளும் உயரத்தான் செய்யும் என்று அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பொருளாதார விற்பன்னர்களும் வியாக்கியானம் அளித்திருந்தனர். இப்போது பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் இருக்கிறது; பணவீக்கமும் மைனஸில் இருக்கிறது. ஆனால் இப்போதும் விலைவாசிகள் மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதானிருக்கின்றன.உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை பெரிதாக உயர்ந்து விடாத நிலையிலேயே மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் டீசல் மீது அபரிமிதமான விலையுயர்வை அறிவித்தது.இது ஏற்கனவே உயர்ந்து கொண்டிருந்த விலைவாசிக்கு மேலும் ஒரு தூண்டுகோலாய் அமைந்தது. மக்களின் வாங்கும் சக்தி குறைவாயிருக்கிற இக்கால கட்டத்தில் விலைவாசிகள் இப்படி இறக்கை கட்டி பறந்து கொண்டிருப்பது அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பெரிதும் பாதித்திருக்கிறது.தமிழக அரசு ரேஷன் கடைகளில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்குவதோடு விலைவாசிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்கிறது; வெளி மர்க்கெட்டில் மற்ற பொருள்களின் விலைகள் எவ்வளவு உயர்ந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கிய அரசு என்று உரக்க முழங்கி ஏதோ தமிழ் நாட்டில் விலைவாசி உயர்வு என்ற துன்பமே மக்களை பாதிக்கவில்லை என்பது போல ஒரு மாயையை உருவாக்கி வருகிறது. 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்குதல் என்பது நல்ல திட்டமே. ஆனால், இத்திட்டத்தின் மூலம் பெரும்பாலான இடங்களில் தரம் குறைந்த அரிசியே வழங்கப்படுவதால் மக்கள் இதை உணவிற்காக பயன்படுத்துவது மிகவும் குறைவாகவேயிருக்கிறது. மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 1 கிலோ அரிசி ரூ 3.50 ஆக இருந்தது; இப்போது ரூ 1 ஆகியிருக்கிறது. இதன் மூலம் மக்களுக்கு 1 மாதத்தில் மீதமாகும் தொகை 2.50*20 வெறும் 50 மட்டுமே; ஆனல், மற்ற பொருள்களின் அதிகபட்ச விலை உயர்வால் ஏற்படும் பொருளாதரப் பிரச்னையில் சிக்கி இந்த 50 ரூபாய் இலாபம் என்பது காணாமல் போய்விடுகிறது.தென்மேற்கு பருவ மழை இந்த வருடம் வழக்கத்தை விட குறைவாக பெய்திருக்கிறது; வட மாநிலங்களும் குறைவான மழைப் பொழிவையே பெற்றிருக்கின்றன; இதனால் உணவுப் பொருள்களின் உற்பத்தி குறையக் கூடும். விலைவாசிகள் மேலும் உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். எனவே மத்திய மாநில அரசுகள் விலைவாசிகளை கட்டுப்படுத்துவதில் உடனடி தீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். வெறும் அறிக்கைகளும் உறுதிமொழிகளும் எந்த பயனையும் தந்து விடப்போவதில்லை. பயன்தரத்தக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையே மக்கள் விரும்புகிறார்கள். கடந்த ஆட்சியிலும் கூட விலைவாசிகள் உயரத்தான் செய்தன என்று புள்ளி விவரங்களை அடுக்கி மக்களை ஏமாற்றாமல் பிரச்னையின் தீவிரத்தன்மையை உணர்ந்து, அதற்கு தீர்வு காணும் வழிகளை ஆராய்ந்து, விலைவாசிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
Friday, August 14, 2009
விடுதலைத் திருநாள்
ஆகஸ்ட்,15 - 2009 இந்தியா அரசியல் ரீதியில் விடுதலை பெற்று 62 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன;ஆனால், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம்,குடிநீர் சாலைகள் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்மை, அறியாமை,இலஞ்சம், ஊழல், மத வெறி, ஜாதி வெறி, மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கும் அறிவீனம் போன்ற தளைகளிலிருந்து நாட்டு மக்களுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை. பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. மகாத்மா காந்தி நடத்திய அஹிம்சா போராட்டத்தின் விளைவாக மட்டும் நாட்டிற்கு விடுதலை கிடைத்திடவில்லை; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மாவீரன் பகத்சிங், வீர சாவர்க்கர், திலகர் போன்றோர் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களும், ஆயிரக்கணக்கான மக்கள் சிந்திய இரத்தமும், தூக்குக் கயிற்றை முத்தமிட்ட நூற்றுக்கணக்கான மாவீரர்களின் தியாகமும் நாம் விடுதலை பெற காரணமாக அமைந்தன.போராடிப் பெற்ற விடுதலையைப் பேணிக்காக்க வேண்டியது நம் அனைவரின் கடமையுமாகும்.சீன, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவை சீர்குலைக்க பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன்; இவர்களது இந்த சதி வேலைகளுக்கு, சித்தாந்தத்தையும் மதத்தையும் காரணம் காட்டி நமது நாட்டிற்குள்ளேயே சில தீய சக்திகள் உதவி வருகின்றன. விழிப்புடன் இருக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. நாட்டில் நிலவும் அவலங்களுக்கு எதிராகவும் நாட்டிற்கெதிரான தீய சக்திகளை அழித்தொழிக்கவும் நம்மால் இயன்ற வழிகளில் நாம் தொடர்ந்து போராடுவோம். பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; நாமதன் புதல்வர்; இந்நினைவகற்றோம்.அனைவருக்கும் இனிய விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Wednesday, August 12, 2009
பன்றிக் காய்ச்சல்
உலகெங்கும் பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் influenza A h1n1 நோய்வெகு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்;சிலர் மரணமடைந்திருக்கின்றனர். இந்நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, மற்றவர்களும் பாதிக்கப்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிற அதே வேளையில் தேவைய்ற்ற பீதியை தவிர்ப்பது மிகவும் அவசியம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக உள்ளவர்கள் இந்நோயின் தாக்குதலிலிருந்து தம்மை எளிதில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.சத்து மிகுந்த உணவு வகைகளை உண்பதன் மூலம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை நாம் அதிகரித்துக் கொள்ள முடியும். இறைச்சி வகைகள், மீன், பால், உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்; தினசரி உடற்பயிற்சி செய்வது நம்மை நோய்கள் அண்டாமல் தடுக்கும். கைகளை அடிக்கடி சோப்பை பயன்படுத்து சுத்தம் செய்வது, வெளியில் சென்று வந்த பின் குளிப்பது போன்றவை இந்த வைரஸ் நம்மை தாக்காமல் தடுக்கும். மக்கள் நெர்சல் மிகுந்த இடங்களில் பயணம் செய்ய நேரும்போது மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளும் கவசம் அணிதல் நல்லது.அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும்;பழச்சாறுகள் அருந்தலாம்.ஆஸ்த்மா, இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, நீண்ட கால நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கருத்தரித்த பெண்கள், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் போன்றவர்களை இந்நோய் எளிதில் தாக்கும்; இந்நோயின் அறிகுறிகளாக 100 முதல் 102 டிகிரி வரை ஜூரமிருக்கும்; தலை வலி, உடல் வலி,வாந்தி இருக்கும்; மூக்கிலிருந்து நீர் ஒழுகும். நோயாளிக்கு மிகவும் களைப்பாக இருக்கும். இத்தகைய நிலையில் உள்ளவர்கள் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுக வேண்டும். முதலில் கூறியது போல் இந்நோய் கண்டவர்கள் தகுந்த உடனடி சிகிச்சை மேற்கொள்ள முயல வேண்டுமே தவிர அச்சமோ பீதியோ அடையக் கூடாது; இந்நோய் கண்டு குணமடைந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.பன்றிக்காய்ச்சல் நோய் மிக வேகமாக பரவி வருகின்ற இந்த வேளையில், இக்கொடிய நோயிலிருந்து மக்களை காக்க மத்திய மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.பொதுவாக இந்நோய் வெளி நாடு சென்று வந்தோர்களின் மூலம் பரவுவதால், வெளி நாடுகளிலிருந்து இங்கே வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இந்நோய்த் தடுப்பு மாத்திரைகளை வழங்கலாம்;அவர்களது இரத்த மாதிரிகளை சேகரித்து சோதனைக்குட்படுத்தலாம். நோயை கண்டறியும் சோதனை முகாம்கள் நாடு முழுக்க நிறுவப்பட வேண்டும்;நோயின் அறிகுறி உள்ளவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான மருந்துகளும் மாத்திரைகளும் தட்டுப்பாடின்றி கிடைக்க வகை செய்தல் வேண்டும்; நாடு முழுக்க தனியார் மருத்துவமனை உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடி மற்றும் தரமான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். நமது அரசு இயந்திரங்களில் வழக்கமாக காணப்ப்படும் மெத்தனப் போக்கு மற்றும் மனித உயிர்களுக்கு மதிப்பளிக்காத அலட்சியப்போக்கு போன்றவற்றை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு, இந்த கொடிய நோயை அழித்தொழித்து மக்களை காக்கும் பணியில் சுறுசுறுப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செயல்பட வேண்டியது இப்போதைய உடனடி தேவை. நாமும் நம்மால் இயன்ற வரை இந்நோய் பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும், அவர்களை இந்நோயிலிருந்து காக்கவும் முயற்சிகள் மேற்கொள்வோம்.Tuesday, July 14, 2009
பெருந்தலைவர் காமராஜ்
நாட்டின் உயர்ந்த தலைவர்; ஈடு இணையற்ற தலைவர்;குடும்ப நலனை விட மக்கள் நலனை பெரிதாக நினைத்தவர்; ஏழைகளுக்காகவே, அவர்களது நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்; நாட்டின் விடுதலைக்காக சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்; சுமார் 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்து,தமிழகத்தை பல வகையிலும் முன்னேற்றியவர்; இலஞ்சம் ஊழல் என்றால் என்னவென்றே தெரியாது ஆட்சி செய்தவர்; தனக்கென்றோ தனது குடும்பத்திற்கென்றோ ஒரு பைசா கூட சொத்து சேர்க்காதவர்; திருமணமே செய்து கொள்ளாமல், தனது வாழ்க்கையை நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தியாகம் செய்தவர்; பிரதமர் பதவியே தன்னை நாடி வந்த போதும் கூட பதவியை நாடாது மக்கள் சேவையை நாடியவர்;இவர் போல் ஒரு தலைவர் இந்த நாட்டில் இனி தோன்ற மாட்டாரா என்று மக்கள் இன்றும் ஏங்குமளவுக்கு பெருமை கொண்டவர்; மாபெரும் தலைவர்; ஈடு இணையற்ற தலைவர்; சரித்திரம் காணாத, இனியும் காண முடியாத அப்பழுக்கற்ற தலைவர்; அவர் பிறந்த தமிழ் நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமை; ஒரு நல்ல தலைவர்; திறமை வாய்ந்த தலைவர்; பெருமை மிக்க தலைவர்; சிறப்பு வாய்ந்த தலைவர்; உண்மையான தலைவர்; எளிமையான தலைவர் என்ற அனைத்தும் சேர்ந்த ஒரு வடிவம் காமராஜ். காமராஜர் ஒரு சரித்திரம்; ஒரு தியாக வரலாறு; பாரதத்தின் உண்மையான ரத்னா. ஜூலை 15. அவரது பிறந்த தினம்; அவரை நாம் என்றும் மறவாதிருப்பதே நாம் நாட்டுக்கு செய்யும் மிகப் பெரும் தொண்டு.Thursday, July 2, 2009
Sunday, June 21, 2009
ஆழ்துளைக் கிணறுகள்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயதுச் சிறுமி அஞ்சனா மீட்புப் படையினரால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறாள்; அவளது பெற்றோர் கடவுளுக்கும், மீட்புப் படையினருக்கும் தங்கள் நன்றியை தெரிவிக்கட்டும்; நாமும் அந்தச் சிறுமி உயிரோடு மீட்கப்பட்டதற்காக நிம்மதி கொள்வோம். இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் அடிக்கடி நிகழ்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன். சிலவற்றில் கிணற்றில் விழுந்த குழந்தைகள் உயீரோடு மீட்கப்பட்டிருக்கின்றனர்; சிலவற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஆக்ராவில் சோனா என்ற 2 வயதுச் சிறுமி இதே போல் மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பிணமாக மீட்கப்பட்டாள். சென்னையில் கூட இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தோண்டிய ஆழ்துளைக் கிணற்றை உறுதியான மரப்பலகைகள் , இரும்புத்தகடுகள் போன்றவற்றால் மூடி வைத்தால் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாது; கிணற்றை சுற்றி தற்காலிக பாதுகாப்பு வேலி கூட அமைக்கலாம். ஆனால் இந்த சிறு காரியத்தை கூட கிணற்றின் உரிமையாளர்கள் மேற்கொள்வதில்லை; அலட்சிய மனப்பான்மையே இதற்கு காரணம். இதுபோன்ற சம்பவங்களுக்கு கிணற்றின் உரிமையாளர்கள் கொலைக் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட்டாலே இனி இதுபோல் நிகழாமல் பாதுகாக்கலாம்.
Monday, May 18, 2009
நன்றிக்கடன்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்,காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.மகத்தான வெற்று பெற்றிருக்கிறது. ஆனால், இந்த பெருவெற்றிக்கு காங்கிரஸ் தகுதியானதுதானா..? கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் சாதித்தது என்ன..? கடுமையான விலைவாசி உயர்வு; தொழிற்சாலைகள் மூடல்; இலட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையிழப்பு; வறுமையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை; கோடி கோடியாய் ஊழல்கள்; ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் சுமார் 1 இலட்சம் கோடியளவுக்கு மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது; போபர்ஸ் ஊழலில் சோனியாவுக்கு நெருங்கியவரான குவத்ரோச்சியை கைதாகி விடாமல் பாதுகாக்கவும், அவர் ஊழலில் பெற்ற் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷன் தொகையை பத்திரமாக எடுத்துச் செல்லவும் உதவியது; மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யை சுயமாக செயல்பட விடாமல் செய்து, அதை காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்சி போல் மாற்றியது; நாடு முழுக்க பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; மத்திய அரசு பயங்கரவாதத்திற்கெதிராக மிக மிக மென்மையான போக்கை கடைப்பிடித்தது; பயங்கரவாதத்தால், ஆயிரக்கண்க்கில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்படுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத காங்கிரஸ் அரசு, முகமது அப்சல், அக்மல் கசாப் போன்ற தேச விரோத பயங்கரவாதிகளின் உயிர்களை பாதுகாப்பதில் மட்டும் மிகவும் அதீத கவனம் செலுத்தி வருகிறது; பங்களதேஷிலிருந்து நாட்டிற்குள் ஊடுருவிய கோடிக்கணக்கானவர்களின் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது காங்கிரஸ் அரசு; நாட்டில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் இப்படி சட்டவிரோதமக குடியேறியவர்களின் கை இருப்பது புலனாய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தனது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்த பெருமை காங்கிரஸ் அரசுக்குரியது; இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த தவறான அணுகுமுறையின் விளைவாக ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; மத்திய காங்கிரஸ் அரசு சோனிய குடும்ப அரசாக செயல்பட்டு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி உட்பட பல்வேறு உதவிகளை புரிந்ததன் விளைவாக இலங்கை அரசு தமிழினப் படுகொலயையே நிறைவேற்றி முடித்திருக்கிறது; இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக 75 இலட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டு பதுக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் பல நாடுகள் இப்படி தங்கள் நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட கருப்பு பண்த்தை மீட்க பெருமுயற்சி எடுத்து வருகின்ற வேளையில் காங்கிரஸ் அரசு அதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததோடு அது சாத்தியமற்றது என்று கூறி பெரும் கருப்புப் பண முதலைகளை காப்பாற்ற முயற்சிக்கிறது. இப்படி பலவற்றை வரிசையாக கூறிக் கொண்டே தொடரலாம். இவைகள் இந்த அளவு பெரு வெற்றிக்கு ஐ.மு.கூ சிறிதும் தகுதியற்றது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், மக்கள் தீர்ப்பு அது தவறாயிருந்தாலும் கூட மதிக்கப்பட வேண்டியது அவசியம்; எனவே இனிவரும் காலங்களிலாவது தேச நலன் மக்கள் நலன் என்பதை மட்டும் அடிப்படையாய் கொண்டு செயல்பட்டு இந்தியாவை உலக அரங்கில் முதலிடத்திற்கு கொண்டு செல்வதை இலக்காக கொண்டு பணியாற்றுவதே வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் செய்யும் நன்றிக்கடனாயிருக்கும்
Subscribe to:
Posts (Atom)
