Monday, May 18, 2009

நன்றிக்கடன்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்,காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.மகத்தான வெற்று பெற்றிருக்கிறது. ஆனால், இந்த பெருவெற்றிக்கு காங்கிரஸ் தகுதியானதுதானா..? கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் சாதித்தது என்ன..? கடுமையான விலைவாசி உயர்வு; தொழிற்சாலைகள் மூடல்; இலட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையிழப்பு; வறுமையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை; கோடி கோடியாய் ஊழல்கள்; ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் சுமார் 1 இலட்சம் கோடியளவுக்கு மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது; போபர்ஸ் ஊழலில் சோனியாவுக்கு நெருங்கியவரான குவத்ரோச்சியை கைதாகி விடாமல் பாதுகாக்கவும், அவர் ஊழலில் பெற்ற் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷன் தொகையை பத்திரமாக எடுத்துச் செல்லவும் உதவியது; மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யை சுயமாக செயல்பட விடாமல் செய்து, அதை காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்சி போல் மாற்றியது; நாடு முழுக்க பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; மத்திய அரசு பயங்கரவாதத்திற்கெதிராக மிக மிக மென்மையான போக்கை கடைப்பிடித்தது; பயங்கரவாதத்தால், ஆயிரக்கண்க்கில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்படுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத காங்கிரஸ் அரசு, முகமது அப்சல், அக்மல் கசாப் போன்ற தேச விரோத பயங்கரவாதிகளின் உயிர்களை பாதுகாப்பதில் மட்டும் மிகவும் அதீத கவனம் செலுத்தி வருகிறது; பங்களதேஷிலிருந்து நாட்டிற்குள் ஊடுருவிய கோடிக்கணக்கானவர்களின் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது காங்கிரஸ் அரசு; நாட்டில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் இப்படி சட்டவிரோதமக குடியேறியவர்களின் கை இருப்பது புலனாய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தனது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்த பெருமை காங்கிரஸ் அரசுக்குரியது; இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த தவறான அணுகுமுறையின் விளைவாக ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; மத்திய காங்கிரஸ் அரசு சோனிய குடும்ப அரசாக செயல்பட்டு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி உட்பட பல்வேறு உதவிகளை புரிந்ததன் விளைவாக இலங்கை அரசு தமிழினப் படுகொலயையே நிறைவேற்றி முடித்திருக்கிறது; இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக 75 இலட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டு பதுக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் பல நாடுகள் இப்படி தங்கள் நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட கருப்பு பண்த்தை மீட்க பெருமுயற்சி எடுத்து வருகின்ற வேளையில் காங்கிரஸ் அரசு அதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததோடு அது சாத்தியமற்றது என்று கூறி பெரும் கருப்புப் பண முதலைகளை காப்பாற்ற முயற்சிக்கிறது. இப்படி பலவற்றை வரிசையாக கூறிக் கொண்டே தொடரலாம். இவைகள் இந்த அளவு பெரு வெற்றிக்கு ஐ.மு.கூ சிறிதும் தகுதியற்றது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், மக்கள் தீர்ப்பு அது தவறாயிருந்தாலும் கூட மதிக்கப்பட வேண்டியது அவசியம்; எனவே இனிவரும் காலங்களிலாவது தேச நலன் மக்கள் நலன் என்பதை மட்டும் அடிப்படையாய் கொண்டு செயல்பட்டு இந்தியாவை உலக அரங்கில் முதலிடத்திற்கு கொண்டு செல்வதை இலக்காக கொண்டு பணியாற்றுவதே வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் செய்யும் நன்றிக்கடனாயிருக்கும்

Sunday, May 10, 2009

அச்சம் தரும் நினைவுகள்

இந்தியப் பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் என்பவனுக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு கடந்த 5 வருடங்களாக தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல், அவனை பாதுகாத்து வருகிறது. சிறுபான்மையினர்களின் ஓட்டுக்காக அப்சலை தூக்கிலிடாமல் காலம் தள்ளி வருகிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதிகளை கூட தண்டிக்க ம்றுக்கும், அதிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பயங்கரவாதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றாமலிருக்கிற காங்கிரஸ் அரசின் இது போன்ற செயல்பாடுகள்தான் நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்க முக்கிய காரணமாயிருக்கின்றது. இந்த விஷயத்தில் ராகுல் காந்தி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் வரிசைப்படி பார்த்தால் அப்சல் 22 வது இடத்தில் இருக்கிறான். அப்சலுக்கு முன் இருக்கிற 21 பேரும் தூக்கிலிடப்பட்ட பின் அப்சல் தூக்கிலிடப்படுவான் என்று கூறியிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், உணர்ச்சி வசப்பட்டும் கொலை போன்ற காரியங்களில் ஈடுபட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களை அப்சலோடு ஒப்பிடுகிறார் ராகுல். இது ஒரு பொறுப்பற்ற பேச்சு மட்டுமல்லாது நியாயமற்றதும் கூட. நமது நாட்டை சீர்குலைக்க திட்டமிட்டு, பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தவன் அப்சல்; நமது பாதுகாப்பு படை வீரர்கள் மட்டும் தங்கள் இன்னுயிரை ஈந்து அந்த தாக்குதலை முறியடித்திருக்காவிட்டால் நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் உட்பட பலர் உயிரிழந்திருப்பதோடு நாடே பயங்கரவாதிகளின் கைகளில் பணயக் கைதியாக மாற நேர்ந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு கொடூர பயங்கரவாதியை சாதாரண கொலைக்குற்றவாளியோடு ஒப்பிடுகிறார் ராகுல் என்றால் இது எத்தகைய மடத்தனமானது..? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நமது நாட்டுக்கு கிடைத்த சாபம். இப்படிப்பட்டவர்களால்தான் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து அப்பாவிகள் ஆயிரமாயிரமாய் தங்கள் இன்னுயிர்களை இழக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்டவர்களை மக்கள் ஒட்டுமொத்தமாய் நிராகரிக்க வேண்டும். சமீபத்தில் மும்பை மீது தாக்குதல் தொடுத்து நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிரோடு பிடிபட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறான். அவனுக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பது உறுதி. ராகுல் கூற்றுப்படி பார்த்தால் தூக்கு தண்டனை குற்றவாளிகள் பட்டியலில் கசாப் 23 வது இடத்திலிருப்பார்; எனவே கசாப்புக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என்பதுதானே ராகுல் தரும் செய்தி. எனவே ஒன்று மட்டும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்து விட்டால், எந்த பயங்கரவாதிக்கும் அவன் முஸ்லிமாக இருந்து விட்டால் தண்டனை கிடையாது என்பது உறுதியாகி விட்டது.இன்னொன்றும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்தால், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகர்க்கவே செய்யும்; காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஆயிரமாயிரமாய் மக்கள் பயங்கரவாதத்திற்கு தங்கள் இன்னுயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதிகளால் ஆயிரமாயிரமாய் மக்கள் கொல்ல‌ப்ப‌ட‌லாம்; ஆனால் ஒரு ப‌ய‌ங்க‌ர‌வாதி த‌ண்டிக்க‌ப்ப‌ட்டுவிடக் கூடாது என்ப‌துதான் காங்கிர‌சின் கொள்கை . ராகுலின் பேச்சு இதைத்தான் எடுத்துக்காட்டுகிற‌து. அர‌சிய‌லில் இப்போதுதான் காலெடுத்து வைத்திருக்கின்ற் நில‌யில், ராகுலின் எண்ணங்கள் இப்படிப்பட்ட நிலையில் இருப்பதை பார்க்கும்போது இவரெல்லாம் பிரதமராகி விட்டால், நாடு என்ன ஆகும்..? மக்கள் என்ன கதிக்கு ஆளாவார்கள்..? நினைத்துப்பார்க்கவே அச்சமாயிருக்கிறது.

Sunday, April 26, 2009

இந்தியா அடிமைகளின் தேசமல்ல

சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா தேர்தல் கூட்டத்தில் பேசும் போது, எனது தம்பி ராகுல் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்தான் என்று குறிப்பிட்டிருக்கிறார். சோனியா காந்தி பேசும்போது, ராகுல் இப்போது பிரதமராக மாட்டார்; வருங்காலத்தில் பிரதமராவார் என்று கூறியிருக்கிறார்.
ராகுல் காந்தியோ எனக்கு இன்னும் போதுமான அனுபவம் கிடைக்கவில்லை; எனவே இப்போது பிரதமராக மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இந்தக் குடும்பம் ஏதோ மன்னர் குடும்பம் போலவும் இந்தியா ஏதோ அவர்கள் குடும்பத்திற்கு சொந்தமான நாடு என்பது போலவும் இவர்களது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றன. இவர்களது இத்தகைய ஆணவப் பேச்சுக்களுக்கும், ஆணவ மனப்பான்மைக்கும் இந்தியர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்கள் இந்தக் குடும்பத்திற்கு காலம் காலமாக கொத்தடிமைகளாக இருந்து கொண்டிருப்பாதால்தான் இவர்களிடமிருந்து இத்தகைய பேச்சுக்கள் வெளிப்படுகின்றன. ஆனால் ஒரு விஷயம் தெளிவானது; காங்கிரஸ்காரர்கள்தான் சோனியா குடும்பத்தின் கொத்தடிமைகளே தவிர மக்கள் அல்ல; இந்தியா மிகப்பெரும் தேசம்; ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த நாட்டை ஆளும் தகுதியுண்டு. 2001 ல் காங்கிரசிலிருந்த முதுகெலும்புள்ள ஆண்மகனான நரசிம்மராவ் பிரதமராயிருந்தபோதே இந்தக் குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு மக்கள் முடிவு கட்டிவிட்டார்கள். சுயமரியாதை அற்ற, தன்மானமிழந்த சில காங்கிரஸ்காரர்கள் இன்னும் இந்தக் குடும்பத்தின் கொத்தடிமைகளாகவே இருந்து கொண்டிருப்பதால், சோனிய குடும்பத்தினர் நாட்டின் பிரதமர் பதவி தங்கள் குடும்பச் சொத்து என்று கனவெல்லாம் கண்டு கொண்டிருக்கக் கூடாது. அது என்றுமே கனவாகத்தான் இருக்கும்.

Sunday, April 12, 2009

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர்

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார்.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர்.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார். இந்தியாவின் மாபெரும் த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ டாக்ட‌ர் அம்பேத்க‌ர் அவ‌ர்க‌ளின் பிற‌ந்த‌ நாளில் அவ‌ரை பெருமையுட‌ன் நினைவுகூர்வோம்.

Tuesday, April 7, 2009

ஏப்ரல் 14. தமிழ்ப் புத்தாண்டு தினம்

இலங்கை இராணுவத்தின் குண்டுவீச்சில் சிக்கி இலங்கைத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலட்சக்கணக்கான அப்பாவித் த‌மிழர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு வருகிறது.அவர்கள் தங்கள் சொந்த வீடு நிலங்களை துறந்து, காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவ‌தோடு,பல்வேறு நாடுகளில் அகதிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை காப்பாற்றவும், அவர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை பெற்றுத்தர வேண்டிய இந்திய அரசு தனது கடமையிலிருந்து தவறியிருப்பதோடு, இலங்கை அரசுக்கு மறைமுக உதவிகளையும் செய்து வருகிறது. இந்த தமிழ் புத்தாண்டு தினத்தில், சகோதர இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவை தெரிவிக்க உறுதி கொள்வோம்..

Monday, March 30, 2009

வாக்களிக்க பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்கள்.

மிகப் பெரும் தேர்தல் திருவிழாவை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது; நாம் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் 110 கோடி மக்களின் நன்மை தீமைகளை,உயர்வு தாழ்வுகளை நிர்ணயிக்கப் போகின்றது.தேர்தல் நாளன்று தவறாது வாக்களிப்போம்.தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டி பணம் அளிக்கப்படலாம்; விலையுயர்ந்த பொருட்கள் கூட பரிசாக அளிக்கப்படலாம். சமீபத்தில் நடந்த திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த உப தேர்தலின் போது ஆளும் கட்சிக்கு சாதகமாக வாக்களிப்பதற்காக ஒவ்வொரு வாக்களருக்கும் தலைக்கு ரூ 5000 மற்றும் அதற்கு மேலும் அளிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ந‌டக்கவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும் அதேபோல பணம் வாரி வழங்கப்படலாம். சாதனைகளை விட பண பலமும் படை பலமுமே இப்போதெல்லம் தேர்தலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்குவது சரியா..? முற்றிலும் தவறு என்பதே இதற்கு பதில் என்பதை அனைவரும் அறிவார்கள்; குறிப்பிட்ட கட்சிக்கு அல்லது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி பணம் அல்லது விலையுயர்ந்த பொருட்கள் அளிக்கப்பட்டால், அதை வாங்காமல் நிராகரிப்பது மிகவும் உயர்ந்த கொள்கை; அப்படிச் செய்பவர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.ஆனால், வேறோரு விஷயமும் இங்கு மனதில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. வாக்களர்களுக்கு பணம் அளிப்பவர்கள் யாரும் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை அளிப்பதில்லை. லஞ்சம்,ஊழல், கமிஷன் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் வரிப்பணத்தின் ஒரு பகுதியைத்தான் இப்படி தேர்தலின் போது மக்களுக்கு இலஞ்சமாக அளிக்கிறார்கள்; சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்கும் கதையாக இப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுபவர்கள் அதற்குப் பிறகு தான் செலவழித்ததை விட பலமடங்கு பணத்தை மக்கள் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடிக்கவும் செய்கிறார்கள்.எனவே தேர்தலின் போது அரசியல்வாதிகள் மக்களுக்கு அளிக்கும் பண்ம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமே. எனவே,தேர்தலின் போது தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க அரசியல் கட்சிகள் பணம் அளித்தால் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் பணம் பெற்றுக் கொண்டோம் என்பதற்காக அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியதில்லை. மக்களிடமிருந்து கொள்லையடித்த பணத்தில் ஒரு சிறு பகுதியைத்தான் மக்களுக்கு அளிக்கிறார்கள். அதற்காக நன்றிக் கடன்பட்டு அவர்களுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டிய எந்த அவசியமுமில்ல. மொத்த‌த்தில் இதுதான் விஷ‌ய‌ம். வாக்க‌ளிக்க‌ ப‌ண‌ம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்க‌ள்; ஏனெனில், அது ம‌க்க‌ளின் ப‌ண‌ம்தான். ஆனால், ந‌ன்றிக் க‌ட‌ன்ப‌ட்டு அவ‌ர்க்ளுக்கே வாக்க‌ளிக்காதீர்க‌ள்; ந‌ன்றாக‌ யோசித்து யாருக்கு வாக்க‌ளிக்க‌ வேண்டுமோ அவ‌ர்க‌ளுக்கு வாக்க‌ளியுங்க‌ள். யார் ல‌ஞ்ச‌ம் வாங்க‌ மாட்டார்க‌ளோ.... யார் ஊழ‌ல் செய்ய‌ மாட்டார்களோ...யார் க‌மிஷ‌ன் வாங்க‌ மாட்டார்க‌ளோ...யார் த‌ன‌து குடும்ப‌த்தின் வ‌ள‌ர்ச்சிக்காக மட்டும் உழைக்காமல் மக்க‌ளுக்காக‌ பாடுபடுவார்க‌ளோ..யார் இலவசங்களை மட்டும் கொடுத்து மக்களை ஏமாற்றாமால் ம‌க்க‌ளின் வாழ்க்கைத் த‌ர‌ உய‌ர்வுக்காக‌ ந‌ல்ல‌ ந‌ல்ல‌ திட்ட‌ங்க‌ளை நிறைவேற்றுவ‌ர்க‌ளோ..யார் ம‌க்க‌ளை த‌ங்க‌ள் அழ‌குப் பேச்சால் ஏமாற்றாம‌ல் உண்மையிலேயே ம‌க்க‌ளுக்காக உழைப்பார்களோ..யார் தேச‌ ந‌ல‌ன் ம‌ற்றும் தேச‌த்தின் பாதுகாப்பிற்காக‌ உறுதியுட‌ன் போராடுவார்க‌ளோ...அவர்களுக்கு வாக்களியுங்கள்.

Thursday, March 26, 2009

இது ஒரு அவமானம்

ஐ.பி.எல் 20/20 கிரிக்கெட் போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் நடத்துவது என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருக்கிறது. இம்முடிவு வெறும் பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாரியம் செயல்படுவதை எடுத்துக் காட்டுகிறது. நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுகிற காலகட்டத்தில் போட்டிகளை ஏற்பாடு செய்து விட்டு பின்பு அரசிடமிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான உத்தரவாதம் கிடைக்கவில்லை என்று கூறி போட்டிகளை வெளி நாட்டில் நடத்த ஏற்பாடு செய்திருப்பது நாட்டுக்கு அவமானகரமான விஷயம். தேர்தல் முடிந்த பிறகு நடத்தும் வகையில் போட்டிகளை வாரியம் தள்ளி வைத்திருக்க வேண்டும்.மத்திய அரசும் இவ்விசயத்தில் சொதப்பியிருக்கிறது.போட்டிகளை வெளி நாட்டில் நடத்த அனுமதியளித்திருக்கக் கூடாது. கோடிகளை விட நாட்டின் கௌரவம் முக்கியம் என்பதை வாரியம் உணர்ந்து கொள்ள வேண்டும்; அரசு அதை வாரியத்திற்கு உணர்த்தியிருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியமே இந்தியாவில் பாதுகாப்பில்லை என்று கூறி வெளிநாட்டில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினால் மற்ற நாட்டு கிரிக்கெட் குழுக்கள் எப்படி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வரும்..? நடைபெறவிருக்கின்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள மற்ற நாட்டு விளையாட்டு வீரர்கள் எப்படி இந்தியா வர துணிவு கொள்வார்கள்..? உலக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிருக்கின்ற இக்கால கட்டத்தில் இதுபோன்றதொரு நிலை உருவாக்கப்ப‌ட்டிருப்பது வருந்தத்தக்கது.இந்தியா ஒரு பாதுகாப்பற்ற தேசம் என்ற ஒரு செய்தியை இந்திய கிரிக்கெட் வாரியமே உலகுக்கு அறிவித்திருப்பதும் அதை இந்திய அரசும் மௌனமாய் அனுமதித்திருப்பதும் நாட்டை கேவலப்படுத்துகிறது.