Friday, August 14, 2009

விடுத‌லைத் திருநாள்

ஆகஸ்ட்,15 - 2009 இந்தியா அரசியல் ரீதியில் விடுதலை பெற்று 62 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன;ஆனால், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம்,குடிநீர் சாலைகள் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்மை, அறியாமை,இலஞ்சம், ஊழல், மத வெறி, ஜாதி வெறி, மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கும் அறிவீனம் போன்ற தளைகளிலிருந்து நாட்டு மக்களுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை. பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. மகாத்மா காந்தி நடத்திய அஹிம்சா போராட்டத்தின் விளைவாக மட்டும் நாட்டிற்கு விடுதலை கிடைத்திடவில்லை; நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மாவீரன் பகத்சிங், வீர சாவர்க்கர், திலகர் போன்றோர் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களும், ஆயிரக்கணக்கான மக்கள் சிந்திய இரத்தமும், தூக்குக் கயிற்றை முத்தமிட்ட நூற்றுக்கணக்கான மாவீரர்களின் தியாகமும் நாம் விடுதலை பெற கார‌ண‌மாக‌ அமைந்த‌ன‌.போராடிப் பெற்ற‌ விடுதலையைப் பேணிக்காக்க‌ வேண்டிய‌து ந‌ம் அனைவ‌ரின் க‌ட‌மையுமாகும்.சீன‌, பாகிஸ்தான் போன்ற‌ நாடுக‌ள் இந்தியாவை சீர்குலைக்க‌ ப‌ல்வேறு ச‌தி வேலைக‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன்; இவ‌ர்க‌ள‌து இந்த சதி வேலைகளுக்கு, சித்தாந்தத்தையும் ம‌தத்தையும் காரணம் காட்டி ந‌ம‌து நாட்டிற்குள்ளேயே சில‌ தீய‌ ச‌க்திக‌ள் உத‌வி வ‌ருகின்ற‌ன. விழிப்புட‌ன் இருக்க‌ வேண்டிய‌து ஒவ்வொரு இந்திய‌னின் க‌ட‌மை. நாட்டில் நில‌வும் அவ‌ல‌ங்க‌ளுக்கு எதிராக‌வும் நாட்டிற்கெதிரான‌ தீய‌ ச‌க்திக‌ளை அழித்தொழிக்க‌வும் நம்மால் இயன்ற வழிகளில் நாம் தொட‌ர்ந்து போராடுவோம். பார‌த‌ நாடு பார்க்கெலாம் திலகம்; நாம‌த‌ன் புத‌ல்வ‌ர்; இந்நினைவ‌க‌ற்றோம்.
அனைவ‌ருக்கும் இனிய‌ விடுத‌லைத் திருநாள் நல்வாழ்த்துக்க‌ள்.

Wednesday, August 12, 2009

பன்றிக் காய்ச்சல்

உலகெங்கும் பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் influenza A h1n1 நோய்வெகு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்;சிலர் மரணமடைந்திருக்கின்றனர். இந்நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, மற்றவர்களும் பாதிக்கப்படாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிற அதே வேளையில் தேவைய்ற்ற பீதியை தவிர்ப்பது மிகவும் அவசியம்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக உள்ளவர்கள் இந்நோயின் தாக்குதலிலிருந்து தம்மை எளிதில் பாதுகாத்துக் கொள்ள முடியும்.சத்து மிகுந்த உணவு வகைகளை உண்பதன் மூலம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை நாம் அதிகரித்துக் கொள்ள முடியும். இறைச்சி வகைகள், மீன், பால், உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்; தினசரி உடற்பயிற்சி செய்வது நம்மை நோய்கள் அண்டாமல் தடுக்கும். கைகளை அடிக்கடி சோப்பை பயன்படுத்து சுத்தம் செய்வது, வெளியில் சென்று வ‌ந்த‌ பின் குளிப்ப‌து போன்ற‌வை இந்த‌ வைர‌ஸ் ந‌ம்மை தாக்காம‌ல் த‌டுக்கும். ம‌க்க‌ள் நெர்ச‌ல் மிகுந்த‌ இடங்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்ய‌ நேரும்போது மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளும் க‌வ‌ச‌ம் அணித‌ல் ந‌ல்ல‌து.அடிக்க‌டி த‌ண்ணீர் அருந்த வேண்டும்;ப‌ழ‌ச்சாறுக‌ள் அருந்த‌லாம்.ஆஸ்த்மா, இத‌ய‌ நோய், ச‌ர்க்க‌ரை நோய், சிறுநீர‌க‌ பாதிப்பு, நீண்ட‌ கால‌ நோய்வாய்ப்ப‌ட்ட‌வ‌ர்கள் மற்றும் க‌ருத்த‌ரித்த‌ பெண்க‌ள், வய‌து முதிர்ந்தோர், குழ‌ந்தைக‌ள் போன்றவர்களை இந்நோய் எளிதில் தாக்கும்; இந்நோயின் அறிகுறிக‌ளாக‌ 100 முத‌ல் 102 டிகிரி வ‌ரை ஜூர‌மிருக்கும்; தலை வ‌லி, உட‌ல் வ‌லி,வாந்தி இருக்கும்; மூக்கிலிருந்து நீர் ஒழுகும். நோயாளிக்கு மிக‌வும் க‌ளைப்பாக‌ இருக்கும். இத்த‌கைய‌ நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள் உட‌ன‌டியாக‌ த‌குந்த‌ ம‌ருத்துவ‌ரை அணுக‌ வேண்டும். முதலில் கூறிய‌து போல் இந்நோய் க‌ண்ட‌வ‌ர்க‌ள் த‌குந்த உடனடி சிகிச்சை மேற்கொள்ள முயல வேண்டுமே த‌விர‌ அச்ச‌மோ பீதியோ அடைய‌க் கூடாது; இந்நோய் க‌ண்டு குண‌ம‌டைந்த‌வ‌ர்க‌ள் ஆயிர‌க்க‌ணக்கானோர் உண்டு என்ப‌தை ம‌ற‌ந்து விட‌க்கூடாது.ப‌ன்றிக்காய்ச்ச‌ல் நோய் மிக‌ வேக‌மாக‌ ப‌ர‌வி வ‌ருகின்ற‌ இந்த‌ வேளையில், இக்கொடிய‌ நோயிலிருந்து ம‌க்க‌ளை காக்க மத்திய மாநில அரசுகள் விரைவான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை மேற்கொள்ள‌ வேண்டும்.பொதுவாக‌ இந்நோய் வெளி நாடு சென்று வ‌ந்தோர்க‌ளின் மூல‌ம் ப‌ர‌வுவ‌தால், வெளி நாடுக‌ளிலிருந்து இங்கே வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு விமான‌ நிலைய‌ங்க‌ளில் இந்நோய்த் த‌டுப்பு மாத்திரைக‌ளை வ‌ழ‌ங்க‌லாம்;அவ‌ர்க‌ள‌து இர‌த்த‌ மாதிரிக‌ளை சேக‌ரித்து சோத‌னைக்குட்ப‌டுத்த‌லாம். நோயை க‌ண்ட‌றியும் சோத‌னை முகாம்க‌ள் நாடு முழுக்க‌ நிறுவ‌ப்ப‌ட‌ வேண்டும்;நோயின் அறிகுறி உள்ள‌வ‌ர்க‌ளுக்கும், பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கும் தேவையான‌ ம‌ருந்துக‌ளும் மாத்திரைக‌ளும் த‌ட்டுப்பாடின்றி கிடைக்க‌ வ‌கை செய்த‌ல் வேண்டும்; நாடு முழுக்க‌ த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னை உட்ப‌ட‌ அனைத்து ம‌ருத்துவ‌ம‌னைக‌ளிலும் உடனடி ம‌ற்றும் த‌ர‌மான‌ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய‌ வேண்டும். ந‌ம‌து அர‌சு இய‌ந்திர‌ங்க‌ளில் வழக்கமாக காண‌ப்ப்ப‌டும் மெத்த‌ன‌ப் போக்கு ம‌ற்றும் ம‌னித‌ உயிர்க‌ளுக்கு ம‌திப்ப‌ளிக்காத‌ அல‌ட்சிய‌ப்போக்கு போன்ற‌வ‌ற்றை மூட்டை க‌ட்டி மூலையில் வைத்து விட்டு, இந்த‌ கொடிய‌ நோயை அழித்தொழித்து ம‌க்க‌ளை காக்கும் ப‌ணியில் சுறுசுறுப்புட‌னும், சேவை ம‌ன‌ப்பான்மையுட‌னும் செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌து இப்போதைய‌ உட‌ன‌டி தேவை. நாமும் ந‌ம்மால் இய‌ன்ற‌ வ‌ரை இந்நோய் ப‌ற்றி ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஊட்ட‌வும், அவ‌ர்க‌ளை இந்நோயிலிருந்து காக்க‌வும் முய‌ற்சிக‌ள் மேற்கொள்வோம்.

Tuesday, July 14, 2009

பெருந்தலைவர் காமராஜ்

நாட்டின் உய‌ர்ந்த தலைவர்; ஈடு இணையற்ற தலைவர்;குடும்ப நலனை விட மக்கள் நலனை பெரிதாக நினைத்தவர்; ஏழைகளுக்காகவே, அவர்களது நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த மாபெரும் தலைவர்; நாட்டின் விடுதலைக்காக சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்; சுமார் 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்து,தமிழகத்தை பல வகையிலும் முன்னேற்றியவர்; இலஞ்சம் ஊழல் என்றால் என்னவென்றே தெரியாது ஆட்சி செய்தவர்; தனக்கென்றோ தனது குடும்பத்திற்கென்றோ ஒரு பைசா கூட சொத்து சேர்க்காதவர்; திருமணமே செய்து கொள்ளாமல், தனது வாழ்க்கையை நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தியாகம் செய்தவர்; பிர‌த‌ம‌ர் ப‌த‌வியே த‌ன்னை நாடி வந்த‌ போதும் கூட பதவியை நாடாது மக்கள் சேவையை நாடியவர்;இவர் போல் ஒரு தலைவர் இந்த நாட்டில் இனி தோன்ற மாட்டாரா என்று மக்கள் இன்றும் ஏங்குமளவுக்கு பெருமை கொண்டவர்; மாபெரும் தலைவர்; ஈடு இணையற்ற தலைவர்; சரித்திரம் காணாத, இனியும் காண முடியாத அப்பழுக்கற்ற தலைவர்; அவர் பிறந்த தமிழ் நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமை; ஒரு நல்ல தலைவர்; திறமை வாய்ந்த தலைவர்; பெருமை மிக்க தலைவர்; சிறப்பு வாய்ந்த தலைவர்; உண்மையான தலைவர்; எளிமையான தலைவர் என்ற அனைத்தும் சேர்ந்த ஒரு வடிவம் காமராஜ். காமராஜர் ஒரு சரித்திரம்; ஒரு தியாக வரலாறு; பாரதத்தின் உண்மையான ரத்னா. ஜூலை 15. அவ‌ர‌து பிற‌ந்த‌ தின‌ம்; அவ‌ரை நாம் என்றும் ம‌ற‌வாதிருப்ப‌தே நாம் நாட்டுக்கு செய்யும் மிக‌ப் பெரும் தொண்டு.

Thursday, July 2, 2009

ஐ.மு.கூ. அரசு மக்களுக்கு தந்த பரிசு

ஐ.மு.கூ. அரசு தனக்கு பெருவாரியாக ஓட்டளித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு, 50 நாட்களுக்குள் பெட்ரோலியப் பொருள்களின் அபரிமிதமான விலை உயர்வு என்ற பரிசை வழங்கி திக்குமுக்காட வைத்திருக்கிறது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ 4 ம் , டீசலுக்கு லிட்டருக்கு ரூ 2 ம் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அத்யாவசியப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வால் பெரும் அவதிப்பட்டு வரும் மக்கள் தலையில் இதன் மூலம் மேலும் விலைவாசி உயர்வு என்ற சுமை ஏறப்போகிறது. உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை ஏறியிருப்பதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என அரசு கூறுகிறது. உலக மார்க்கெட்டில் இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலர் என்ற அளவில் இருக்கிறது. ஆனால், உலகில் கச்சா எண்ணெய் விலை 145 டாலர் என்ற அளவில் இருந்த போது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை எந்த அளவு இருந்ததோ அந்த அளவுக்கு அதிக பட்சமாக விலையை உயர்த்தி மக்களை கசக்கி பிழிந்திருக்கிறது அரசு. 2008 டிசம்பர் முதல் 2009 ஜனவர் வரை அதாவது கச்சா எண்ணெய் விலை 145 டாலர் என்ற அளவில் இருந்த போது பெட்ரோல் விலை சென்னையில் ரூ 49.66. டில்லியில் ரூ 45.62, கொல்கத்தாவில் ரூ 47.16 மும்பையில் ரூ 49.08 ஆக இருந்தது. இதே கால கட்டத்தில் டீசல் விலை சென்னையில் ரூ 34.95, டில்லியில் ரூ 32.06, கொல்கத்தாவில் ரூ 33.92 மும்பையில் ரூ 36.39.ஆக இருந்தது. பிறகு கச்சா எண்ணெய் விலை உலக மர்க்கெட்டில் வெகுவாக சரிந்து பேரலுக்கு 45 டாலர் என்ற் அளவை எட்டியபோது அரசு 2009 ஜனவர் 29 ல், பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது. அப்போது பெட்ரோல் விலை சென்னையில் ரூ 44.24. டில்லியில் ரூ 40.62, கொல்கத்தாவில் ரூ 44.05 மும்பையில் ரூ 44.55 ஆக குறைந்தது. இதே கால கட்டத்தில் டீசல் விலை சென்னையில் ரூ 32.82, டில்லியில் ரூ 30.86, கொல்கத்தாவில் ரூ 33.21 மும்பையில் ரூ 34.45.ஆக குறைந்தது. இப்போதைய விலை ; பெட்ரோல் விலை சென்னையில் ரூ 48.58. டில்லியில் ரூ 44.63, கொல்கத்தாவில் ரூ 48.25 ; மும்பையில் ரூ 48.76ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது . டீசல் விலை சென்னையில் ரூ 34.98, டில்லியில் ரூ 32.87, கொல்கத்தாவில் ரூ 35.03 ; மும்பையில் ரூ 36.07 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது . விலை ஓரளவே அதிகரித்திருக்கும்போது அரசு மிகவும் அதிகபட்சமாக விலையை உயர்த்தியிருக்கிறது என்பது நிதர்சணமான உண்மை. பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிற வரிகளை குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை தவிர்த்திருக்க முடியும். தேர்தல் காலமென்றால் ஆட்சி போய்விடும் என்ற அச்சத்தால் அரசு விலையை உயர்த்த தயங்கும்; ஆனால் இது தேர்தல் காலமல்ல; எனவே சகட்டு மேனிக்கு விலையை உயர்த்தியிருக்கிறது.

Sunday, June 21, 2009

ஆழ்துளைக் கிணறுகள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயதுச் சிறுமி அஞ்சனா மீட்புப் படையினரால் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறாள்; அவளது பெற்றோர் கடவுளுக்கும், மீட்புப் படையினருக்கும் தங்கள் நன்றியை தெரிவிக்கட்டும்; நாமும் அந்தச் சிறுமி உயிரோடு மீட்கப்பட்டதற்காக நிம்மதி கொள்வோம். இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் அடிக்கடி நிகழ்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன். சிலவற்றில் கிணற்றில் விழுந்த குழந்தைகள் உயீரோடு மீட்கப்பட்டிருக்கின்றனர்; சிலவற்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர். கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஆக்ராவில் சோனா என்ற 2 வயதுச் சிறுமி இதே போல் மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பிணமாக மீட்கப்பட்டாள். சென்னையில் கூட இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. தோண்டிய ஆழ்துளைக் கிணற்றை உறுதியான மரப்பலகைகள் , இரும்புத்தகடுகள் போன்றவற்றால் மூடி வைத்தால் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாது; கிணற்றை சுற்றி தற்காலிக பாதுகாப்பு வேலி கூட அமைக்கலாம். ஆனால் இந்த சிறு காரியத்தை கூட கிணற்றின் உரிமையாளர்கள் மேற்கொள்வதில்லை; அலட்சிய மனப்பான்மையே இதற்கு காரணம். இதுபோன்ற சம்பவங்களுக்கு கிணற்றின் உரிமையாளர்கள் கொலைக் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட்டாலே இனி இதுபோல் நிகழாமல் பாதுகாக்கலாம்.

Monday, May 18, 2009

நன்றிக்கடன்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில்,காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.மகத்தான வெற்று பெற்றிருக்கிறது. ஆனால், இந்த பெருவெற்றிக்கு காங்கிரஸ் தகுதியானதுதானா..? கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் சாதித்தது என்ன..? கடுமையான விலைவாசி உயர்வு; தொழிற்சாலைகள் மூடல்; இலட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையிழப்பு; வறுமையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை; கோடி கோடியாய் ஊழல்கள்; ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் சுமார் 1 இலட்சம் கோடியளவுக்கு மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது; போபர்ஸ் ஊழலில் சோனியாவுக்கு நெருங்கியவரான குவத்ரோச்சியை கைதாகி விடாமல் பாதுகாக்கவும், அவர் ஊழலில் பெற்ற் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷன் தொகையை பத்திரமாக எடுத்துச் செல்லவும் உதவியது; மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யை சுயமாக செயல்பட விடாமல் செய்து, அதை காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்சி போல் மாற்றியது; நாடு முழுக்க பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; மத்திய அரசு பயங்கரவாதத்திற்கெதிராக மிக மிக மென்மையான போக்கை கடைப்பிடித்தது; பயங்கரவாதத்தால், ஆயிரக்கண்க்கில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்படுவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத காங்கிரஸ் அரசு, முகமது அப்சல், அக்மல் கசாப் போன்ற தேச விரோத பயங்கரவாதிகளின் உயிர்களை பாதுகாப்பதில் மட்டும் மிகவும் அதீத கவனம் செலுத்தி வருகிறது; பங்களதேஷிலிருந்து நாட்டிற்குள் ஊடுருவிய கோடிக்கணக்கானவர்களின் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது காங்கிரஸ் அரசு; நாட்டில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதச் சம்பவங்களில் இப்படி சட்டவிரோதமக குடியேறியவர்களின் கை இருப்பது புலனாய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தனது அரசியல் ஆதாயத்திற்காக நாட்டின் பாதுகாப்பையே அடகு வைத்த பெருமை காங்கிரஸ் அரசுக்குரியது; இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த தவறான அணுகுமுறையின் விளைவாக ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; மத்திய காங்கிரஸ் அரசு சோனிய குடும்ப அரசாக செயல்பட்டு, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி உட்பட பல்வேறு உதவிகளை புரிந்ததன் விளைவாக இலங்கை அரசு தமிழினப் படுகொலயையே நிறைவேற்றி முடித்திருக்கிறது; இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக 75 இலட்சம் கோடி வரை கருப்புப் பணம் பிற நாடுகளுக்கு கடத்தப்பட்டு பதுக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் பல நாடுகள் இப்படி தங்கள் நாடுகளிலிருந்து கடத்தப்பட்ட கருப்பு பண்த்தை மீட்க பெருமுயற்சி எடுத்து வருகின்ற வேளையில் காங்கிரஸ் அரசு அதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததோடு அது சாத்தியமற்றது என்று கூறி பெரும் கருப்புப் பண முதலைகளை காப்பாற்ற முயற்சிக்கிறது. இப்படி பலவற்றை வரிசையாக கூறிக் கொண்டே தொடரலாம். இவைகள் இந்த அளவு பெரு வெற்றிக்கு ஐ.மு.கூ சிறிதும் தகுதியற்றது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், மக்கள் தீர்ப்பு அது தவறாயிருந்தாலும் கூட மதிக்கப்பட வேண்டியது அவசியம்; எனவே இனிவரும் காலங்களிலாவது தேச நலன் மக்கள் நலன் என்பதை மட்டும் அடிப்படையாய் கொண்டு செயல்பட்டு இந்தியாவை உலக அரங்கில் முதலிடத்திற்கு கொண்டு செல்வதை இலக்காக கொண்டு பணியாற்றுவதே வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் செய்யும் நன்றிக்கடனாயிருக்கும்

Sunday, May 10, 2009

அச்சம் தரும் நினைவுகள்

இந்தியப் பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் என்பவனுக்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு கடந்த 5 வருடங்களாக தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல், அவனை பாதுகாத்து வருகிறது. சிறுபான்மையினர்களின் ஓட்டுக்காக அப்சலை தூக்கிலிடாமல் காலம் தள்ளி வருகிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக பயங்கரவாதிகளை கூட தண்டிக்க ம்றுக்கும், அதிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பயங்கரவாதிக்கு கூட தண்டனையை நிறைவேற்றாமலிருக்கிற காங்கிரஸ் அரசின் இது போன்ற செயல்பாடுகள்தான் நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்க முக்கிய காரணமாயிருக்கின்றது. இந்த விஷயத்தில் ராகுல் காந்தி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் வரிசைப்படி பார்த்தால் அப்சல் 22 வது இடத்தில் இருக்கிறான். அப்சலுக்கு முன் இருக்கிற 21 பேரும் தூக்கிலிடப்பட்ட பின் அப்சல் தூக்கிலிடப்படுவான் என்று கூறியிருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், உணர்ச்சி வசப்பட்டும் கொலை போன்ற காரியங்களில் ஈடுபட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களை அப்சலோடு ஒப்பிடுகிறார் ராகுல். இது ஒரு பொறுப்பற்ற பேச்சு மட்டுமல்லாது நியாயமற்றதும் கூட. நமது நாட்டை சீர்குலைக்க திட்டமிட்டு, பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தவன் அப்சல்; நமது பாதுகாப்பு படை வீரர்கள் மட்டும் தங்கள் இன்னுயிரை ஈந்து அந்த தாக்குதலை முறியடித்திருக்காவிட்டால் நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள் உட்பட பலர் உயிரிழந்திருப்பதோடு நாடே பயங்கரவாதிகளின் கைகளில் பணயக் கைதியாக மாற நேர்ந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு கொடூர பயங்கரவாதியை சாதாரண கொலைக்குற்றவாளியோடு ஒப்பிடுகிறார் ராகுல் என்றால் இது எத்தகைய மடத்தனமானது..? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நமது நாட்டுக்கு கிடைத்த சாபம். இப்படிப்பட்டவர்களால்தான் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து அப்பாவிகள் ஆயிரமாயிரமாய் தங்கள் இன்னுயிர்களை இழக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்டவர்களை மக்கள் ஒட்டுமொத்தமாய் நிராகரிக்க வேண்டும். சமீபத்தில் மும்பை மீது தாக்குதல் தொடுத்து நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்த பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் உயிரோடு பிடிபட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறான். அவனுக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பது உறுதி. ராகுல் கூற்றுப்படி பார்த்தால் தூக்கு தண்டனை குற்றவாளிகள் பட்டியலில் கசாப் 23 வது இடத்திலிருப்பார்; எனவே கசாப்புக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என்பதுதானே ராகுல் தரும் செய்தி. எனவே ஒன்று மட்டும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்து விட்டால், எந்த பயங்கரவாதிக்கும் அவன் முஸ்லிமாக இருந்து விட்டால் தண்டனை கிடையாது என்பது உறுதியாகி விட்டது.இன்னொன்றும் நிச்சயம்; காங்கிரஸ் மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்தால், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகர்க்கவே செய்யும்; காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஆயிரமாயிரமாய் மக்கள் பயங்கரவாதத்திற்கு தங்கள் இன்னுயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதிகளால் ஆயிரமாயிரமாய் மக்கள் கொல்ல‌ப்ப‌ட‌லாம்; ஆனால் ஒரு ப‌ய‌ங்க‌ர‌வாதி த‌ண்டிக்க‌ப்ப‌ட்டுவிடக் கூடாது என்ப‌துதான் காங்கிர‌சின் கொள்கை . ராகுலின் பேச்சு இதைத்தான் எடுத்துக்காட்டுகிற‌து. அர‌சிய‌லில் இப்போதுதான் காலெடுத்து வைத்திருக்கின்ற் நில‌யில், ராகுலின் எண்ணங்கள் இப்படிப்பட்ட நிலையில் இருப்பதை பார்க்கும்போது இவரெல்லாம் பிரதமராகி விட்டால், நாடு என்ன ஆகும்..? மக்கள் என்ன கதிக்கு ஆளாவார்கள்..? நினைத்துப்பார்க்கவே அச்சமாயிருக்கிறது.